கள்ளக்காதலனுக்காக குழந்தைகளை கொன்ற அபிராமியும், நானும் ஒன்றா!. அய்யயோ தாங்கமுடியலையே கதறும் நிலானி!.
கள்ளக்காதலனுக்காக குழந்தைகளை கொன்ற அபிராமியும், நானும் ஒன்றா!. அய்யயோ தாங்கமுடியலையே கதறும் நிலானி!.
சீரியல் நடிகை நிலானி திருமணம் செய்ய மறுத்ததால் உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் லலித்குமாரும், நிலானியும் ஒன்றாக இருந்த படுக்கையறை புகைப்படங்கள் வெளியானது. இதனால் நிலானி காந்தி லலித்குமாரை காதலித்து ஏமாற்றி விட்டார் என கூறிவருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பல தக்வல்களை அவர் கூறினார். அவர் கூறுகையில் கூறுகையில் நான் லலித்குமாரிடம் நண்பராக தான் பழகினேன். கடந்த மூன்று ஆண்டுகளாக லலித்குமாரால் பல கொடுமைகளை அனுபவித்து இருக்கிறேன். குழந்தைகளுக்காகத்தான் அமைதியாகவும் பொறுமையாகவும் இருந்தேன்.
அவர் தான் என்னுடைய நட்பினை தவறாக புரிந்து கொண்டார் என நிலானி கூறியதை பொறுத்துக்கொள்ள முடியாத லலித்குமார் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். மேலும் காந்தி லலித்குமார் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார்.
இந்த நிலையில், கள்ளக்காதலனுக்காக குழந்தைகளை கொன்ற அபிராமியுடன் தன்னை ஒப்பிட்டு பேசுவதாக வேதனையடைந்த நிலானி "நானும் அபிராமியும் ஒன்றா"? என கேட்டு கண்ணீர்விட்டு மனக்குமுறலுடன் பேசியுள்ளார்.
English Summary
Actress Nilani crying for comparing with abirami