தாக்குதல் தொடர்கிறது - போர் நிறுத்த அறிவிப்பை மறுத்த ஈரான்!
The attack continues Iran rejects the ceasefire announcement
போர்நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் அறிவிப்பை ஈரான் மறுத்துள்ளது.
கடந்த ஜூன் 13ஆம் தேதி, இஸ்ரேல் “ஆபரேஷன் ரைசிங் லயன்” எனும் பெயரில் ஈரானின் அணு ஆயுத உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது.இதற்குப் பதிலளித்து, ஈரானும் தாக்குதல் நடத்தி, இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் பெருகியது.
பின்னர், அமெரிக்கா ஈரான் மீது, பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய முக்கிய அணு உலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.இத்தாக்குதலுக்கு ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனி, “அமெரிக்கா இதுவரை எதிர்கொண்டதில்லை எனும் அளவிலான பேரழிவை சந்திக்கும்” என எச்சரித்தார்.பல உலக நாடுகள் இதனை விமர்சிக்க, சிலர் நடுநிலையாக செயல்பட்டனர்.
போர்நிறுத்த அறிவிப்பு: டிரம்ப் ட்ரூத் சோசியல் பதிவு,டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி:ஈரான் முதற்கட்டமாக போர்நிறுத்தத்தில் இணைகிறது,பின்னர் இஸ்ரேல் 12 மணி நேரத்துக்குள் அதனை பின்பற்றுகிறது,24 மணி நேரத்துக்குள் முழுமையான போர்நிறுத்தம் அமலுக்கு வருகிறது,இதனுடன், 12 நாட்கள் நீண்ட இஸ்ரேல்–ஈரான் மோதல் முடிவுக்கு வருகிறது.
மேலும் “போர்நிறுத்த காலத்தில் இரு நாடுகளும் அமைதியாகவும், மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும். பகைமைகள் மறைந்து, இந்த முடிவு உலகத்திற்கே ஒரு பாடமாக அமையட்டும்” என டிரம்ப் குறிப்பிட்டார்.
இந்நிலையில், போர்நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் அறிவிப்பை ஈரான் மறுத்துள்ளது.இது தொடர்பாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி தனது எக்ஸ் பதிவில், "இஸ்ரேல் தான் ஈரான் மீது போரை தொடங்கியது. நாங்கள் போரை தொடங்கவில்லை.தற்போது வரை, போர் நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த 'உடன்பாடும்' எட்டப்படவில்லை.
இருப்பினும், இஸ்ரேலிய ஆட்சி ஈரானிய மக்களுக்கு எதிரான சட்டவிரோத ஆக்கிரமிப்பை தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் நிறுத்தினால், அதன் பிறகு எங்கள் பதிலடியைத் தொடர எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை.எங்கள் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
English Summary
The attack continues Iran rejects the ceasefire announcement