தர்மபுரி அருகே இருசக்கர வாகனம் மோதி கீழே விழுந்த இளைஞர் மீது பேருந்து ஏறியதில் தலை நசுங்கி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தர்மபுரி அருகே இருசக்கர வாகனம் மோதி கீழே விழுந்த இளைஞர் மீது பேருந்து ஏறியதில் தலை நசுங்கி உயிரிழந்துள்ளார்.

தர்மபுரி அருகே இலக்கியம்பட்டியை சேர்ந்தவர் மாது. இவர் நேற்று வெளியூர் சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வரும்போது, பேருந்து நிலையத்தில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது மாதுவின் மீது இருசக்கர வாகனம் மோதி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இந்நிலையில் பின்னால் வந்த அரசு பேருந்து மாதுவின் மீது ஏறி இறங்கியுள்ளது. இதில் மாது பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Accident in dharmapuri near bus stop


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->