தமிழகத்தில் முதல் முறையாக குளிர்சாதன மின்சார பேருந்து சேவை - எப்போதிலிருந்து தொடக்கம் தெரியுமா? - Seithipunal
Seithipunal


வருகின்ற 11 ஆம் தேதி முதல் சென்னையில் முதல் முறையாக குளிா்சாதன வசதி கொண்ட மின்சார பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளதாக மாநகரப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:- "டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சார பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 625 மின்சார பேருந்துகள் 5 பணிமனைகளின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் இயக்க முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக, சென்னை வியாசா்பாடி பணிமனையில் இருந்து 120 மின்சார பேருந்துகளை கடந்த ஜூன் 30-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். 

அடுத்தகட்டமாக பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து 55 குளிா்சாதன வசதி கொண்ட மின்சார பேருந்துகளையும், 80 சாதாரண மின்சார பேருந்துகளையும் இயக்க முடிவு செய்துள்ளோம். 

வருகிற 11-ந்தேதி முதல் இந்த பேருந்துகளின் சேவை தொடங்கப்படும். தொடா்ந்து பிற பணிமனைகளில் இருந்தும் மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ac electric bus service start from coming 11 in chennai


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->