முதல்வர் ஸ்டாலின் வீட்டு முன்பு போராட்டத்தில் குதித்த மாணவர் அமைப்பினர்.! மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் திடுக்.! - Seithipunal
Seithipunal


தஞ்சை மைக்கேல் பற்றி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் லாவண்யா என்ற பிளஸ்டூ மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளி விடுதியின் அறையை வார்டன் சுத்தம் செய்ய வற்புறுத்தி ஆபாசமாக பேசியதால் விஷம் குடித்ததாக கூறப்பட்டது. 

ஆனால் சமூக வலைதளங்களில் அவரை மதம் மாற சொல்லி கட்டாயப்படுத்தியதாக சர்ச்சைகள் எழுந்தது. மாணவியின் தற்கொலையில் பல சந்தேகங்கள் எழுந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது. 

பின் தமிழக டிஜிபி சார்பில் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். 

இந்த வழக்கில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் தற்போது லாவண்யாவின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று ஏபிவிபி மாணவர் அமைப்பினர் முதல்வர் வீட்டு முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது காவல்துறையினர் விரைந்து வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களை அப்புறப்படுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ABVP activists protests against CM stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->