அடையாளம் தெரியதாத வாகனம் மோதி இளைஞர் பலி..! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். இவர் மகன் தீபன் வயது 19. இவரும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (20) , பிரவீன் பாரதி (20)  ஆகியோர் நண்பர்களாக இருந்துள்ளனர். இவர்கள் மூவரும் புகளூரில் உள்ள காகித தொழிற்சாலை ஒன்றில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

தினமும் இவர்கள் மூவரும் இணைந்து தொழிற்சாலைக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் தொழிற்சாலைக்கு சென்றுள்ளனர். அப்போது சாலையில் வந்த வாகனம் ஒன்று அவர்களின் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் மூவரும் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் பிரவீன் பாரதி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a youngster died in accident near karur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->