கோழியை துப்பாக்கியால் சுட்ட விவசாயி: தலையில் குண்டுபாய்ந்து பலியான வாலிபர்: கல்வராயன் மலையில் சோகம்..! - Seithipunal
Seithipunal


கல்வராயன்மலையில் நாட்டு துப்பாக்கியால் கோழியை சுட்டபோது பக்கத்து வீட்டு வாலிபர் தலையில் குண்டுபாய்ந்து அவர் பலியானதாக கூறிய விவசாயியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதிக்கு உட்பட்ட வெள்ளிமலை ஊராட்சி நடுமதூர் கிராமத்தை சேர்ந்தவர் 40 வயதான அண்ணாமலை. விவசாயியான இவர் நேற்றிரவு 09.30 மணி அளவில் தனது மகனுக்கு கோழி அடித்து குழம்பு வைப்பதற்காக தனது வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் கோழியை சுட்டுள்ளார். 

அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வந்த 25 வயதான பிச்சை என்பவரின் மகன் பிரகாஷ் என்பவரது தலையில் எதிர்பாராத விதமாக நாட்டு துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது.அப்போது ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் கரியாலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன் பின்னர் துப்பாக்கியால் சுட்ட அண்ணாமலையை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ள பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அண்ணாமலை முன் விரோதம் காரணமாக வாலிபர் பிரகாஷை கொலை செய்தாரா..? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A young man died after being shot in the head while shooting a chicken


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->