ஆடு மேய்க்க சென்ற பெண் ஆற்றில் மூழ்கடித்து கொலை..இருவர் கைது!
A woman who went to graze her goats drowned in the river Two arrested
ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிய முருகன் மற்றும் அஜித்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூரை அடுத்த கொரடாச்சேரி அருகே உள்ள பெருமாளகரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். கார் டிரைவரான இவரது மனைவி சுதா. இந்த தம்பதிக்கு ஒரு மகனும் ,ஒரு மகளும் உள்ளனர்.இந்தநிலையில் சுதா அடிக்கடி வீட்டின் அருகே உள்ள பாண்டவையாறு கரையில் ஆடு மேய்க்க செல்வது வழக்கம்,
அதன்படி சம்பவத்தன்று சுதா பாண்டவையாறு கரையில் ஆடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக திருவிடைவாசல் பகுதியை சேர்ந்த 48 வயதான முருகன் , 38 வயதான அஜித்குமார் ஆகிய இருவரும் சுதாவை வழிமறித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.இதையடுத்து ஆசைக்கு சுதா இணங்க மறுத்த சுதாவை நீரில் மூழ்கடித்து விட்டு அங்கிருந்து இருவரும் தப்பி ஓடி விட்டனர்.
ஆற்றுக்கரையில் இருந்து அவர்கள் இருவரும் பதற்றமாக ஓடிவருவதை கண்ட அந்த பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்த போது சுதா அலங்கோலமாக கிடந்துள்ளார். உடனடியாக சுதாவை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கொரடாச்சேரி போலீசார் தப்பி ஓடிய முருகன் மற்றும் அஜித்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
English Summary
A woman who went to graze her goats drowned in the river Two arrested