மது பழக்கத்திற்கு அடிமையான கணவன்..!! குழந்தைகளுடன் தூக்கில் தொங்கிய மனைவி..!! வேலூரில் நடந்த பரிதாபம்..!! - Seithipunal
Seithipunal


மது அருந்தி விட்டு தினமும் தகராறு செய்து வந்ததால் 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் சலவன் பேட்டை பகுதியில் வசித்து வருபவர் தினேஷ். இவருக்கு திருமணமாகி ஜீவிதா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் அந்த பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இவருக்கு மதுபழக்கம் இருந்ததால் தினம் வீட்டில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தினமும் மது போதையில் வந்து ஜீவிதாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். அது மட்டுமின்றி குழந்தைகளையும் துன்புறுத்தியுள்ளார்.

தினம் இந்த சித்திரவதையை அனுபவித்து வந்தவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் தனியே இருந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளர்.

இதனால், யாரும் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனது குழந்தைகளின் கழுத்தில் கயிற்றால் நெரித்து கொலை செய்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தினேஷ்குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடி பழக்கத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Woman commited to suicide with her child due to Family Issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->