#தர்மபுரி || மின்சாரம் தாக்கி பலியான தள்ளுவண்டி கடைக்காரர்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..! - Seithipunal
Seithipunal


மின்சாரம் தாக்கி தள்ளு வண்டி ஓட்டல் கடைக்காரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், மல்லிக்குட்டை பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.  இவர் அந்த பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே தள்ளு வண்டியில் ஓட்டல் கடை வைத்து நடத்தி வந்தார்.  வழக்கம் போல சம்பவதன்று விற்பனை முடிந்து தள்ளுவண்டியை தள்ளி கொண்டு வீட்டுக்கு சென்றார். அப்போது, விநாயகர் சதுர்த்தி பண்டிக்கைக்காக சாலையோரம் போடப்பட்டு இருந்த சீரியல் லைட் வயர் வண்டியின் மீது உரசியது.

இதில், பெருமாள் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A man Death in Dharmapuri


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->