திருவண்ணாமலை || அழுகிய நிலையில் கிணற்றில் கிடந்த ஆண் சடலம்.! போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ராட்டினமங்கலம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் 50 வயது மதிப்புதக்க ஆண் சடலம் அழகிய நிலையில் கிடந்துள்ளது. இதைப் பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து ஆரணி காவல் நிலையத்திற்கும், கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கிணற்றிலிருந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், உயிரிழந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A man corpse lying in a well in a state of decay in Tiruvannamalai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->