நாமக்கல்லில் பரபரப்பு! ஷவர்மா சாப்பிட்ட சிறுமி பலி! 17 பேரின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த சுமார் 17 மாணவ மாணவிகள் நேற்று முன்தினம் இரவு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சாலையில் உள்ள ஐவின் என்ற தனியார் உணவகத்தில் இரவு உணவு சாப்பிட்டு உள்ளனர். குறிப்பாக அவர்கள் ஷவர்மா, ப்ரைட் ரைஸ் போன்ற உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

இது நிலையில் உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகள் அனைவருக்கும் நேற்று அதிகாலை வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு, காய்ச்சல் என உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

அவர்களின் பெரும்பாலான மாணவ மாணவிகளுக்கு உடல் நலம் சீரான நிலையில் காய்ச்சல் மட்டும் இருந்ததாக தகவல் வெளியானது. காய்ச்சல் உள்ள மாணவ மாணவிகள் மட்டும் தனி வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் இருந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் உணவகத்திற்கு சென்ற மாவட்ட ஆட்சியர் உமா கெட்டுப்போன உணவுகளை ஆய்வுக்காக அனுப்பியதோடு உணவகத்தை சீல் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் அதே உணவகத்தில் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட கலையரசி என்ற சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த சிறுமியும் அதே உணவகத்தில் ஷவர்மா வாங்கி சாப்பிட்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஷவர்மா சாப்பிட்டதால் சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A girl died who ate shawarma in Namakkal


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->