தொழில் தொடங்க பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் - மாமியாரை கொலை செய்த மருமகன்.! - Seithipunal
Seithipunal


கீழக்கரை அருகே குடும்ப பிரச்சனை காரணமாக மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை இடிஞ்சகல் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்த நிலையில், தினமும் பணிக்கு சென்று அந்த பணத்தை வைத்து மது அருந்திவிட்டு, வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்துள்ளார். 

மேலும், தான் புதிதாக தொழில் தொடங்கப் போவதாகவும், அந்த தொழிலுக்கு பணம் தர வேண்டும் என்றும் முருகன் கூறி வந்துள்ளார். புதிய தொழில் தொடங்க மனைவியின் தாயார் பொன்னம்மாவின் வீட்டிற்குச் சென்று அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று இரவு மதுபோதையில் முருகன் தனது மாமியார் வீட்டிற்குச் சென்று பணம் கேட்டு தகராறு செய்யவே, பொன்னம்மாள் பணம் தர மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகன் வீட்டின் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து, மாமியார் பொன்னம்மாளை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். 

பின்னர் அங்குள்ள காவல் நிலைத்தில் விஷயத்தை கூறி சரணடையவே, தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், பொன்னம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a Drunken Culprit Murder his Wife Mother due to Family Problem 6 Feb 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->