மதுரை : தண்ணீர் அண்டாவில் தவறி விழுந்த 1½ வயது குழந்தை பலி.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் அண்டாவில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் கச்சிராயன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கல்லானை. இவரது மனைவி மீனா. இவர்களுக்கு ஒன்றரை வயது தனியாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மீனா குழந்தையுடன் பட்டூரில் உள்ள அவரது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதையடுத்து அங்கு வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த தனியாஸ்ரீ எதிர்பாராத விதமாக தண்ணீர் ஆண்டாவில் தவறி விழுந்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை தனியாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மேலவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A child died after falling into the water in madurai


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->