4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.! 71 வயது கோவில் பூசாரிக்கு 7 ஆண்டுகள் சிறை.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 71 வயது கோவில் பூசாரிக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் தச்சூர் பகுதியை சேர்ந்தவர் கோயில் பூசாரி சுகுமார் (71). இவர் 4 வயதுடைய சிறுமிக்கு கடந்த 2020ஆம் ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சுகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு திருவண்ணாமலை மாவட்ட போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கோவில் பூசாரி சுகுமாருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூபாய் ஒரு லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A 71 year old temple priest was jailed for 7 years for sexually harassing a 4 year old girl in Tiruvannamalai


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->