மதுரையில் பரபரப்பு.! 65 வயது மூதாட்டி கற்பழித்து கொலை.! போலீசார் தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் 65 வயது மூதாட்டியை கற்பழித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி. இவர் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் மூதாட்டியின் வீடு நேற்று காலை நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர் மூதாட்டியின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது மூதாட்டி வீட்டில் காயமடைந்த நிலையில் மயங்கி கிடந்துள்ளார்.

இதையடுத்து மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் மூதாட்டி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், மூதாட்டியை யாரோ கற்பழித்து கொலை செய்தது தெரியவந்துது. இந்நிலையில் போலீசார் அதே பகுதியை சேர்ந்த அர்ஜுன் (31) என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A 65 year old woman was raped and murder in madurai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->