இலங்கைக்கு கடத்த முயன்ற 90 கிலோ கஞ்சா சிக்கியது!
90 kilograms of cannabis attempting to be smuggled to Sri Lanka was seized
படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரை பகுதிக்கு இந்த கஞ்சா பார்சல்கள் கொண்டு வரப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை மாவட்ட போலீசார் கண்க்கணித்து தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்து வருகின்றார். சமீப காலமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் போதை பொருட்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர், போதைப் பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்து அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே சரக்கு வாகனத்துடன் நின்றிருந்த சிலர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.
அ.மணக்குடி ஓடக்கரை முனியய்யா கோவில் அருகே உள்ள கடற்கரை பகுதியில் நேற்று அதிகாலை கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யனார், கதிரவன் உள்ளிட்ட போலீசா்ா அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடற்கரை பகுதியில் சரக்கு வாகனத்துடன் நின்றிருந்த சிலர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.
போலீசார் விரட்டிச் சென்று சரக்கு வாகனத்தின் டிரைவரை மடக்கி பிடித்து அந்த சரக்கு வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர்.
அதில் 3 சாக்கு பைகளில் 90 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், அதன் டிரைவரான புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள காரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த டிரைவர் ராஜமாணிக்கம் என்பவரை கைது செய்தனர்.
இதுதொடர்பாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரை பகுதிக்கு இந்த கஞ்சா பார்சல்கள் கொண்டு வரப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
English Summary
90 kilograms of cannabis attempting to be smuggled to Sri Lanka was seized