திருமங்கலம் அருகே சோகம்: மின்சாரம் தாக்கி 7ஆம் வகுப்பு மாணவி பலி.!
7th class girl electrocution in tirumangalam near madurai
மதுரை மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 7ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சின்ன உலகாணி பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகள் கார்த்திகைசெல்வி(12) அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் காளிமுத்து தோட்டத்து பகுதியில் புதிதாக வீடு கட்டி உள்ளார். ஆனால் கட்டிட பணி இன்னும் முடியாத நிலையில், நேற்று இரவு கார்த்திகை செல்வி வீட்டில் மின்விசிறி போடுவதற்காக ஒயரை பிளகில் சொருகியுள்ளார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கார்த்திகை செல்வி தூக்கி வீசப்பட்டுள்ளார். இதையடுத்து உடனடியாக கார்த்திகை செல்வியை மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே கார்த்திகை செல்வி இறந்து விட்டார் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கூடக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
7th class girl electrocution in tirumangalam near madurai