சென்னை :: உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.74.90 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.! வாலிபர் கைது.!
74 lakhs 90 thousand worth gold seized in Chennai airport
துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூபாய் 74.90 லட்சம் மதிப்புலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் சென்னையை சேர்ந்த வாலிபரை கைது செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்திவரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னை வாலிபர் ஒருவரிடம் விசாரணை செய்தனர். அதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்து அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்த ரூபாய் 74.90 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 400 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்த சென்னையை சேர்ந்த வாலிபரை கைது செய்த அதிகாரிகள் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
74 lakhs 90 thousand worth gold seized in Chennai airport