டாஸ்மார்க் ஊழியரை தாக்கி 6 லட்சம் கொள்ளை..! சேலத்தில் பரபரப்பு..!
6 lakh robbery after attacking Tasmac employee in Salem
டாஸ்மார்க் ஊழியரை தாக்கி 6 லட்சம் ரூபாய் கொள்ளையடித்தவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த கொத்தம்பட்டியை கிராமத்தை சேர்ந்தவர் மோகன், இவருக்கு வயது 46. இவர் ஏத்தாப்பூர் பேரூராட்சியில் உள்ள மதுமான கடையில் டாஸ்மாக் மேலாளராக பணியாற்றி வருகிறார். தினமும் இரவில் கடையை மூடிவிட்டு விற்பனையான பணத்தை எடுத்து கொண்டு வீட்டிற்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், அவர் நேற்றிரவு வழக்கம் போல அவர் கடையை பூட்டி விட்டு விற்பனையான பணம் ரூ.6 லட்சத்து 11 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்குள்ள கே.ஆர்.தோப்பு என்ற இடத்தில் சென்றபோது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்த பணத்தை பறித்து சென்றுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மோகனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட மர்ம நபர்களை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
6 lakh robbery after attacking Tasmac employee in Salem