ஆந்திராவில் பயங்கரம்: போலீஸார் முன்னிலையிலேயே மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்!
Tragedy in Andhra Pradesh Husband Murders Wife in Front of Police Over Extramarital Affair
ஆந்திர மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள ஒரு கொடூரக் கொலைச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதலனுடன் செல்வேன் என அடம்பிடித்த மனைவியை, ஒரு போலீஸ்காரர் கண்முன்னாலேயே கணவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்த விபரீதம் அரங்கேறியுள்ளது.
சங்கரெட்டி மாவட்டம் ஜரசங்கம் பகுதியைச் சேர்ந்த சித்தா ரெட்டி (35) என்பவர் பானி பூரி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி கவிதா (29). இத்தம்பதிக்கு 9 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர். சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் திருப்பதியைச் சேர்ந்த பவன் குமார் ரெட்டி என்பவருடன் கவிதாவிற்குப் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியது. இதன் காரணமாக, கடந்த மார்ச் 27-ஆம் தேதி தனது குழந்தைகளையும் கணவரையும் தவிக்க விட்டு கவிதா காணாமல் போனார்.
போலீஸ் விசாரணை
கணவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், கவிதா ஜட்சர்லாவில் இருப்பது கண்டறியப்பட்டது. அவரை அழைத்து வருவதற்காக சித்தா ரெட்டி ஒரு காவலருடன் காரில் அங்கு சென்றார். அங்கிருந்த கவிதாவைச் சமாதானப்படுத்தி கணவருடன் வருமாறு போலீஸார் கூறினர். ஆனால், கள்ளக்காதலனை விட்டு வர முடியாது என்று கூறிய கவிதா, தனது கணவரை மிக ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.
அதிர்ச்சியூட்டும் கொலை:
காரில் திரும்பிக் கொண்டிருந்த போது, ஒரு டீ கடையில் கார் நிறுத்தப்பட்டது. அப்போது சித்தா ரெட்டி ரகசியமாகக் கத்தி ஒன்றை வாங்கி தனது பாக்கெட்டில் மறைத்து வைத்துக் கொண்டார். கார் மீண்டும் புறப்பட்ட சிறிது நேரத்தில், ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற சித்தா ரெட்டி, முன் இருக்கையில் போலீஸ்காரர் அமர்ந்திருக்கவே, பின் இருக்கையில் இருந்த தனது மனைவியின் கழுத்தை ஆவேசமாக அறுத்தார். ரத்தம் பீறிட்டுக் கொட்டிய நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட கவிதா, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பாதுகாப்புக்கு வந்த காவலர் தடுத்தும் இந்தக் கொலை நிகழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சித்தா ரெட்டியை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு நிமிடம் சிந்தித்துச் செயல்படாத ஆத்திரமும், தவறான உறவும் ஒரு குடும்பத்தைச் சிதைத்து, இரண்டு குழந்தைகளை அனாதை ஆக்கியுள்ளது இச்சம்பவம் மூலம் வேதனையுடன் வெளிப்படுகிறது.
English Summary
Tragedy in Andhra Pradesh Husband Murders Wife in Front of Police Over Extramarital Affair