அடேங்கப்பா! தர்மபுரி ஒகேனக்கல்லுக்கு 57,000 கன அடியாக நீர்வரத்து...! நீடிக்கும் தடை...!
57000 cubic feet of water flow to Dharmapuri Okenakkal ban will continue
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து கேரள மாநிலத்தின் வயநாடு மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீர் திறப்பு அதிகரித்துள்ளதால் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேலும் தர்மபுரி மாவட்டம் சுற்றுலாத் தலமான ஒகேனக்கல் காவிரி ஆற்றில், நேற்று மாலை விநாடிக்கு 50,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று மேலும் அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 57,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி, ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இந்த நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், காவிரி ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரிப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டுள்ளது.
English Summary
57000 cubic feet of water flow to Dharmapuri Okenakkal ban will continue