'பா.ஜ., பா.ம.க., இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம்: அதிமுக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்': திருமாவளவன்..!
Thirumavalavan says AIADMK should be cautious in alliance with BJP
அ.தி.மு.க., பா.ஜ., இரு கட்சிகளும் கூட்டணி அமைத்ததால் எங்களுக்கு கசப்பு கிடையாது. ஆனால், அ.தி.மு.க., எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய பொது அவர் இது குறித்து மேலும் கூறியதாவது: தி.மு.க., கூட்டணிக்கு பா.ம.க., வரும் போது அது குறித்து பதில் சொல்கிறேன் என்றும், பா.ஜ., பா.ம.க., இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம் என நிலையான நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி அமைத்துள்ளது. அதனை ஏன் உடைக்க வேண்டும் என்றும், இரு கட்சிகளும் கூட்டணி அமைத்ததால் எங்களுக்கு கசப்பு கிடையாது. கூட்டணி குறித்து அ.தி.மு.க., எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு, நடிகர்கள் கைதானது அதிர்ச்சியான ஒன்று என்றும், இதனால் சினிமா துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இதை தொழிலாக செய்கிறார்கள், வருமானம் தேடுகிறார்கள், நாட்டை பாழாக்குகிறார்கள் என குற்றம் சுமத்த விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நடிகர், நடிகககள் உள்பட புகழ்பெற்றவர்கள் போதைப்பொருளுக்கு ஆளாகி அடிமையாகி சீரழிகிறார்கள் என்பது கவலை அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மதுக்கடைகளை மூடுவதுடன் மூலமும், போதைப்பொருள் புழக்கத்தையும் தமிழக அரசு தடுக்க வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதற்கு என தனிப்படை அமைத்து, கட்டுக்குள் கொண்டுவந்து, தமிழக இளைஞர்களை காப்பாற்ற வேண்டும் என திருமாவளவன் நிருபர்களிடம் கூறியுள்ளார்.
English Summary
Thirumavalavan says AIADMK should be cautious in alliance with BJP