8.5 லட்சம் போலி வங்கிக் கணக்குகள்..CBI அதிரடி நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் சைபர் குற்றவாளிகள் மோசடிக்கு பயன்படுத்திய 8.5 லட்சம் போலி வங்கிக் கணக்குகளை சி.பி.ஐ. (CBI) வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பல்வேறு வங்கிகளின் 700 கிளைகளில், முறையான KYC விதிமுறைகளை பின்பற்றாமல், போலி ஆவணங்களை கொண்டு இந்த கணக்குகள் தொடக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.

இந்த கணக்குகள் சில சமயங்களில் சம்பந்தப்பட்ட நபரின் அறியாமலே தொடக்கப்பட்டதுடன், இவற்றின் பின்னணியில் சில வங்கி ஊழியர்கள், இ-மித்ரா முகவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் குற்றவாளிகளுக்கு உதவியாக இருந்தது CBI விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த போலி கணக்குகள் பெரும்பாலும் ஒரே தடவை பயன்படுத்தப்பட்டு, மோசடியாக பெறப்பட்ட பணம் அதில் சேரும் பொழுது, அதை பல்வேறு கணக்குகளுக்கு உடனே பரிமாற்றம் செய்துவிடுகின்றனர். பின்னர் அந்த கணக்குகள் மூடப்பட்டு விடுகின்றன. இதனால் குற்றவாளிகளை அடையாளம் காண்பதும், கைது செய்வதும் சிரமமாகிறது.

இந்த மோசடி தொடர்பாக, ராஜஸ்தான், டெல்லி, அரியானா, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 42 இடங்களில் சி.பி.ஐ. சோதனைகள் நடத்தினது.

சோதனையில்:முக்கிய ஆவணங்கள்,டிஜிட்டல் ஆதாரங்கள்,செல்போன்கள்,வங்கிக் கணக்கு தொடக்க ஆவணங்கள்,பண பரிமாற்ற விவரங்கள்,கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கிடையே 9 பேர் சி.பி.ஐ.யின் காவலில் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணையை CBI தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வங்கித் துறையின் பாதுகாப்பு நடைமுறைகள் மீதான கேள்விகளும் இதில் எழுந்துள்ளன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

8.5 lakh fake bank accounts CBI takes drastic action


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->