பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு..200க்கு 200 பெற்ற 145 பேர்! - Seithipunal
Seithipunal


அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில்,கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தரணி என்ற மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் (Rank List) இன்று வெளியிடப்பட்டது.

இது தொடர்பான விழா சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:மொத்த விண்ணப்பங்கள்: 3,02,374,கட்டணம் செலுத்தியவர்கள்: 2,49,000,உரிய சான்றுகள் பதிவேற்றம் செய்தவர்கள்: 2,26,000,இதில் 145 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்களுடன் முழு வெற்றி பெற்றுள்ளனர்.

பொதுப் பிரிவு கலந்தாய்வு: ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 17 வரை,சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு: ஜூலை 7 முதல்,அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில்,கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தரணி என்ற மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.இந்த 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் 51,004 அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

கணினி வசதி இல்லாத கிராமப்புற மாணவர்கள், தங்கள் மாவட்டங்களில் உள்ள உதவி மையங்களில் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.தரவரிசை மற்றும் கட்டண விவரங்களை  www.tneaonline.org தெரிந்து கொள்ளலாம் என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Engineering admission rank list released145 people scored 200 out of 200


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->