தனி மாநில தகுதி வேண்டி டெல்லியில் நேரு MLA தலைமையில் போராட்டம் நடத்திய பொதுநல அமைப்புகள்!
Public welfare organizations staged a protest in Delhi under the leadership of Nehru MLA demanding statehood
புதுச்சேரிக்கு தனி மாநில தகுதி வேண்டி இன்று வெள்ளிக்கிழமை தலைநகர் டெல்லியில் திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் தலைமையில் மற்றும் பொதுநல அமைப்பை சேர்ந்த தலைவர்கள் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது...
புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வேண்டி தலைநகர் டெல்லிக்கு போராட்டத்திற்காக ரயில் பயணமாக 25.06.2025... புதன்கிழமை அன்று காலை 9:30. மணி அளவில் புதுச்சேரி காரைக்கால் பகுதியை சேர்ந்த சுமார் 170 நபர்கள் சென்றனர்.... இவர்களை வழி அனுப்புவதற்காக புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை தலைவர்
திரு.M.வைத்தியநாதன் MLA அவர்களும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக மாநில செயலாளருக்கு திரு.A.அன்பழகன் ex. MLA அவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்ததிரு.கார்த்திகேயன் ex.MLA அவர்கள் மற்றும் அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு வழி அனுப்பி வைத்தனர்,
மேலும் விமானம் மூலம் 30-க்கும் மேற்பட்டோர் புது டெல்லி வந்து அடைந்தனர் இதனை தொடர்ந்து . வெள்ளிக்கிழமை இன்று காலை 10:00 மணி அளவில் போராட்டம் தலைநகர் டெல்லி ஜந்தர்பந்தர் பகுதியில் துவங்கியது .. போராட்டம் புதுச்சேரி மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவர்
திரு.G.நேரு(எ) குப்புசாமி MLA அவர்கள் தலைமையிலும் பொதுநல அமைப்பை சேர்ந்த தலைவர்கள் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் பகள்காம் தீவிரவாத தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கும் குஜராத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் மற்றும் புதுச்சேரிக்கு தனிமாநில தகுதி வேண்டி போராடி உயிர் நீத்த தோழர்களுக்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது... மேலும் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டது மேலும் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பதாகைகள் ஏந்தி புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கி புதுச்சேரி ஆட்சியாளர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டனர்.
English Summary
Public welfare organizations staged a protest in Delhi under the leadership of Nehru MLA demanding statehood