மாணவியை சீரழித்த சம்பவம்! 3 மாணவர்கள் சேர்ந்து சட்டக் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்...!
incident where law college student was harassment by 3 students
மேற்கு வங்காள மாநிலத்தில் கஸ்பா என்ற பகுதியில் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவியை 3 மாணவர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து 3 மாணவர்களையும் காவலர்கள் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் அக்கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார் என்ற திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் இதுகுறித்த தகவலில் மாணவியை கல்லூரிக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, சில மாதங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கொல்கத்தாவில் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது பெரும் சோகத்தை தற்போது ஏற்படுத்தியுள்ளது.
English Summary
incident where law college student was harassment by 3 students