மகள்களுக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை: தந்தை கைது! - Seithipunal
Seithipunal


தந்தை தனது இரு மகள்களுக்கு 5 ஆண்டுகளாக தொடர்ந்த பாலியல் தொல்லை கொடுத்த கொடூர சம்பவம் ராஜஸ்தானில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் பளி மாவட்டம், சர்தார் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது இரு மகள்களுக்கு 5 ஆண்டுகளாக தொடர்ந்த பாலியல் தொல்லை கொடுத்த கொடூர சம்பவம்  போலீசாரை உலுக்கியது.

மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக வந்த சிறுமிகளின் உடல்நிலை குறித்து சந்தேகம் ஏற்பட்ட மருத்துவர்கள், தாயிடம் விசாரணை நடத்தினர். அதில், சிறுமிகள் தங்களது தந்தைதான் பாலியல் தொல்லை கொடுக்கிறார் என தகவல் வெளியானது.தாயாரும் இது குறித்து முன்னதாகவே அறிந்திருந்தும், புகார் செய்யவில்லை என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து மருத்துவர்கள், ஒரு தொண்டு அமைப்பின் உதவியுடன் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், தந்தையை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.மேலும் அவர் மீது பாலியல் குற்றம் மற்றும் பாக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி மற்றும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Father arrested for sexually harassing daughters for 5 years


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->