உட்கட்சி விவகாரம் குறித்து அறிவுறுத்தல்: தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த உத்தரவு என்ன?
Instructions regarding internal party issues What order given by Madras High Court Election Commission
அதிமுக பொதுச் செயலாளர் 'எடப்பாடி பழனிசாமி' அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக உரிமையியல் வழக்குகள் முடியும் வரை சின்னம் ஒதுக்கக் கூடாது என்ற வழக்குகளை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது," இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதை எதிர்க்கும் மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கக் கூடாது. சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டிய சூழலில் தேர்தல் ஆணையம் ஆரம்பகட்ட விசாரணையை நடத்தாமல் இருப்பது தேவையற்றது.
ஆரம்பகட்ட விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் விசாரணை குறித்து எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதை தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
English Summary
Instructions regarding internal party issues What order given by Madras High Court Election Commission