நிரந்தர பணி வழங்க வேண்டும்..நுகர் பொருள் வாணிப கழக கிட்டங்கு தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!
Permanent employment should be provided The workers of the consumer goods trade federation are on strike
ஆண்டிப்பட்டியிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிட்டங்கியின் கீழ் பணிபுரியும் சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் - ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, நிரந்தர பணி செய்வதற்கான அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர் .
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி - வைகைஅணை சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் அவர்கள் கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.தற்காலிக தொழிலாளர்களை நிரந்தரமாக பணிபுரியும் வகையில் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்,தொழிலாளர்களுக்கான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்,தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றாவிட்டால் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்க ஆண்டிபட்டி கிளை தலைவர் கணேசன், செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பிருந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி, தற்போது ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Permanent employment should be provided The workers of the consumer goods trade federation are on strike