கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்யாததால் நோய் தொற்று அபாயம் ..பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்! - Seithipunal
Seithipunal


ஆண்டிபட்டி பேரூராட்சி பாப்பம்மாள் புரத்தில் கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்யாததால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது . மேலும் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் செய்யாமல் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் பாப்பம்மாள் புரம் 3வது வார்டில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் .இந்நிலையில் பல்வேறு தெருக்களில் கழிவுநீர் வாய்க்கால் ,கடந்த ஒரு மாதமாக சுத்தம் செய்யப்படாததால், கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால், இப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது .இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை எடுத்துக் கூறியும், நிர்வாகத்தினர் மெத்தனப் போக்கை கடைபிடித்து, அலட்சியம் காட்டி வருகிறார்கள். இதனால் குழந்தைகள் ,பெரியவர்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் கழிவுநீர் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Due to the lack of cleaning of the sewage drain, there is a risk of diseasesnegligence of the village administration


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->