மாணவர்களுக்கு குட் நியூஸ் : அரசுப் பள்ளிகளில் ’வாட்டர் பெல்’ திட்டம்: அன்பில் மகேஷ் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் முகமாக ’வாட்டர் பெல்’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

இது குறித்து பேசிய அமைச்சர் “கேரளத்தில் அமலில் இருக்கும் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் ’வாட்டர் பெல் திட்டம்’ அரசுப் பள்ளிகளில் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த ’வாட்டர் பெல்’ திட்டத்தை அரசுப் பள்ளிகளில் செயல்படுத்த விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து  அவருடைய எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் இருந்த 03 உருது கல்விச் சரகங்கள் கலைக்கப்பட்டது. ஆனால், சிறுபான்மையினர் நலன்காக்கும் திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு உருது ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கையை ஏற்று 03 உருது சரகங்களுக்குப் பதிலாக 06 உருது சரகங்களை அமைத்தார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

இதற்காக ஓசூரில் தமிழ்நாடு உருது தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் நன்றி அறிவிப்பு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகள் தெரிவித்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஓசூரில் அமைந்துள்ள அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் புதுமையான கற்றல் மற்றும் கற்பித்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள எழுத்தறிவு மேம்பாட்டு மையத்தினைத் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார் உரையாற்றினார். அங்கு, அமெரிக்கன் இந்தியா அறக்கட்டளை சார்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 16 அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டெம் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையங்களையும் (STEM & SILC) திறந்து வைத்ததோடு, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

மாவட்ட வாரியாக பள்ளித் தலைமையாசிரியர்களுடனான ஆய்வுக் கூட்டத்தின் 3ஆவது சந்திப்பு ஓசூரில் எனது தலைமையில் இன்று நடைபெற்றது.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். #SLAS அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளை முன்வைத்து, மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டோம்.

“அடுத்தாண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் கற்றல் அடைவுகளில் முன்னேறியுள்ளது என #SLAS அறிக்கையின் முடிவுகளில் வர வேண்டும். அதற்கான முயற்சிகளை இன்றிலிருந்தே மேற்கொள்ளுங்கள். உங்களின் முயற்சிகளுக்கு துணை நிற்போம்” என ஊக்கமளித்து விடைபெற்றோம். என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Anbil Mahesh announces Water Bell scheme to be set up in government schools


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->