8ஆம் வகுப்பு மாணவி பலாத்காரம் - போக்சோவில் 56 வயது நபர் கைது..! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் 8ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 56 வயது நபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த கீழ்வடக்குத்து காலனியை சேர்ந்தவர் தொழிலாளி செல்வராஜ்(56). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவர், வடலூர் பகுதியில் பெட்டிக்கடை வைத்திருக்கும் ஒரு பெண்ணுக்கு கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து உதவி செய்து வந்தார். இந்நிலையில் கடந்து சில மாதங்களுக்கு முன்பு, பெட்டிக்கடை வைத்திருந்த பெண்ணுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் ஓய்வெடுத்து வருவதால், இவரது பெட்டிக்கடையை தம்பி மகளான 14 வயதுடைய 8ம் வகுப்பு மாணவி கவனித்து வந்தார். மேலும் மாணவி பெற்றோரை இழந்தவர். இந்நிலையில் பெட்டி கடைக்கு அடிக்க அடிக்கடி வந்த செல்வராஜ் சம்பவத்தன்று, மாணவியிடம் ஓட்டலில் சாப்பாடு வாங்கி தருவதாக கூறி மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால் வடலூர் ரெயில் ரோடு அருகே சென்ற செல்வராஜ் மோட்டார் சைக்கிளில் நிறுத்திவிட்டு மாணவியை மரங்கள் நிறைந்த பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிடவே, ஆத்திரமடைந்த செல்வராஜ் மாணவியை அடித்து வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். மேலும் மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து வீட்டிற்கு வந்த மாணவி இது குறித்து அத்தையிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் அத்தை உடனடியாக இந்த சம்பவம் குறித்து நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சட்டத்தின் கீழ் செல்வராஜை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

56 year old man arrested for raping a 8th class girl in Cuddalore


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->