18 வயதுக்கு மேற்பட்ட 55 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை - சுகாதார செயலாளர்..!
55 lakh people over 18 years of age have not been vaccinated for the first time
18 வயதுக்கு மேற்பட்ட 55 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை எனமருத்துவத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை, தேனாம்பேட்டை பகுதியில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள கட்டளை மையத்தை மருத்துவதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். இதனை அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது,
தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட 55 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை என தெரிவித்தார். தமிழகத்தில் தற்போது 1 லட்சத்து 91 ஆயிரம் படுக்கைகள் உள்ளதாகவும், இதில் கொரோனாவுக்கு மட்டும் 1 லட்சத்து 28 ஆயிரம் படுக்கைகள் உள்ளது.
டெல்டா வகை தொற்று 10 முதல் 15 சதவிகிதம் பதிவாகி வருவதாகவும், தொற்று பாதிக்கப்பட்ட 7 சதவிகிதம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவித்ததார்.
English Summary
55 lakh people over 18 years of age have not been vaccinated for the first time