விவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சி - சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என்று, சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சற்று முன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று மின்சாரத் துறை, மதுவிலக்கு மற்றும் தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

இதில் அமைச்சர் செந்தில்பாலாஜி மின்சார துறை சம்பந்தமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் குறிப்பாக அறிவிப்பாக தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை இருந்த போதிலும், தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற ஒரு தகவலை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

முக்கிய அறிவிப்பாக தமிழகத்தில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை தெரிவித்துள்ளார். 

தமிழ் நாட்டில் விவசாய உற்பத்தியை பெருக்கவும் விளைநிலங்களின் பரப்பை அதிகரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

50000current connection for farmers


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->