புதுக்கோட்டையில் பரபரப்பு.! காவல் நிலையம் முன்பு தற்கொலைக்கு முயன்று, சாலையில் படுத்து உருண்ட 4 பெண்கள்.!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தின் முன்பு நான்கு பெண்கள் விஷம் குடிக்க முயன்று சாலையில் படுத்து உருண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பனங்குளம் பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன்(25). இவர் ஆன்லைன் பார்சல் டெலிவரி செய்து வந்தார். அப்பொழுது கட்டுமாவடி பகுதியை சேர்ந்த கணவருடன் விவாகரத்தாகி ஏழு வயது மகனுடன் வசித்து வந்த கார்த்திகா என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இவர்கள் இரண்டு பேரும் வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று பரதேஸ்வரன் மற்றும் கார்த்திகா கட்டுமாவடி பகுதிக்கு வந்துள்ளனர். அப்பொழுது பரமேஸ்வரன் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பரமேஸ்வரனை கார்த்திகாவிடமிருந்து பிரித்து அழைத்து சென்றுள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கார்த்திகா கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் இரு வீட்டாரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்பொழுது பரமேஸ்வரன், கார்த்திகாவுடன் செல்வதாக காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பரமேஸ்வரனில் தாய் மற்றும் அவரது மூன்று சகோதரிகள் இருசக்கர வாகனத்தில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

ஆனால் உடனடியாக போலீசார் பூச்சி மருந்து பாட்டில் தட்டி விட்டனர். இருப்பினும், அவர்கள் பூச்சி மருந்தை குடித்து விட்டதாக கூறி நான்கு பெண்களும் சாலையில் படுத்து உருண்டுள்ளனர். மேலும் மயங்கிய நிலையில் கிடந்த பெண்ணை காவல் நிலைய வாசலில் போட்டு ரகலையில் ஈடுபட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் நான்கு பெண்களையும் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர்கள் விஷம் குடிப்பதை தடுக்க முயன்றபோது, வினிதா என்ற பெண் காவலரின் கண்ணில் பூச்சி மருந்து பட்டதால் அவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 women tried to commit suicide by drinking poison in front of the police station in Pudukkottai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->