நேருக்கு நேர் மோதிய ஆம்னி வேன் - அரசு பேருந்து ; 4 பேர் பலி.!!
4 peoples died for accident in thiruthuraipoondi
கேரளா மாநிலத்தில் இருந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணிக்கு ஆம்னி வண ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேன் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி அருகே பாண்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து ஆம்னி வேனில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
4 peoples died for accident in thiruthuraipoondi