#சென்னை || ஒரே நாளில் சட்டவிரோத 34 பார்களுக்கு சீல்.. வருவாய் துறையினர் அதிரடி..!! - Seithipunal
Seithipunal


சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த மதுபான பார்கள் மீது இன்று காலை முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக தாம்பரம் மற்றும் பல்லாவரம் பகுதிகளில் சட்டவிரோத பார்களை வருவாய் துறை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். அதே போன்று வண்டலூர், திருப்போரூர் தாலுகாவிலும் சட்ட விரோத பார்கள் மோடி சீல் வைக்கும் பணியானது நடைபெற்றது.

தாம்பரம் தாலுகாவில் மேடவாக்கம், சேலையூர், முடிச்சூர் உட்பட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்த 27 சட்டவிரோத பார்களை தாம்பரம் தாசில்தார் கவிதா தலைமையிலான வருவாய் துறை அலுவலர்கள் சீல் வைத்தனர். பல்லாவரம் பகுதிகளைப் பொறுத்தவரை 7 இடங்களில் செயல்பட்டு வந்த சட்டவிரோத பார்களுக்கு சீல் வைத்துள்ளனர். இந்த பார்களை பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையிலான வருவாய்த்துறையினர் சீல் வைத்துள்ளனர்.

தாம்பரம் மற்றும் பல்லாவரம் பகுதிகளை சேர்த்து மொத்தமாக 74 சட்டவிராத பார்கள் செயல்பட்டு வந்ததை வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் எந்த டாஸ்மாக் கடையின் கீழ் இந்த சட்டவிரோத பார்கள் செயல்பட்டு வருகின்றன என்பதை வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அதன் அடிப்படையில் தற்போது வரை 34 சட்டவிரோத பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மற்ற பார்கள் மீது உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

34 illegal bars sealed in one day at Chennai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->