திருவள்ளூரில் கொடூரம்; நண்பன் கொலைக்கு பழி தீர்ப்பு; 20 வயது இளைஞர் வெட்டிக்கொலை; 03 பேர் கைது..! - Seithipunal
Seithipunal


திரு​வள்​ளூர் மாவட்​டம், கும்​மிடிப்​பூண்டி பகு​தி​யைச் சேர்ந்​தவர் நடராஜ் என்​கிற நவமணி. ரவுடி​யான இவர் மீது கும்​மிடிப்​பூண்டி சிப்​காட், பொன்​னேரி உள்​ளிட்ட காவல் நிலை​யங்​களில் 15-க்​கும் மேற்​பட்ட குற்ற வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன.

ஆவடிடேங்க் பேக்​டரி காவல் நிலைய எல்​லைப் பகு​தி​களில், சந்​தேகத்​துக்​கிட​மான வகை​யில் மது​போதை​யில் சுற்​றிய நடராஜை போலீ​ஸார் பிடித்து விசா​ரித்​துள்ளனர்.

அப்போது போலீசாருக்கு திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். அதாவது,கடந்த 5-ம் தேதி நண்​பர்​களு​டன் இணைந்து, ஆவடி அருகே உள்ள பொத்​தூர் பகு​தி​யில் வசித்து வந்த சூர்​யா (20) என்ற இளைஞரை கொலை செய்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்த கொலை சம்​பவம் வெங்​கல் காவல் நிலைய எல்​லைக்கு உட்​பட்​பகுதில் இடம்பெற்றது என்​ப​தால், நடராஜை ஆவடி டேங்க் பேக்டரி போலீ​ஸார் வெங்​கல் போலீ​ஸாரிடம் ஒப்​படைத்​தனர்.

அதனை தொடர்ந்து வெங்​கல் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து நடராஜை கொலை நடந்த இடத்​துக்கு அழைத்​துச் சென்றுள்ளனர். அங்கு சட்டமாக கிடந்தசூர்​யா​வின் உடலைக்கைப்​பற்​றி, பிரேதப் பரிசோதனைக்​காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் தொடர்ந்து நடராஜிடம் நடத்திய விசாரணையின் படி, அவரது நண்​பர்களான பெஞ்​சமின் (20), ஆகாஷ் (25) ஆகியோரை நேற்று கைது செய்துள்ளனர். கைதான 03 பேரிடம் போலீ​ஸார்விசா​ரணை​ செய்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது; ஆவடி அருகே உள்ள பொத்​தூர் பகு​தி​யைச் சேர்ந்​தவர் நிலத்​தரகர் சதீஷ் (38). ரவுடி நடராஜின் நெருங்​கிய நண்​ப​னான இவர், கடந்த 01-ந் தேதி கொலை செய்​யப்​பட்​டார்.

இது தொடர்​பாக அதே பகு​தி​யைச் சேர்ந்த பரத்​ (20) என்ற இளைஞரை ஆவடி டேங்க் பேக்​டரி போலீ​ஸார் ஏற்​கெனவே கைது செய்​துள்​ளனர். இந்​நிலை​யில், தன் நண்பன் சதீஷை கொலை செய்​த​தால், அதற்கு பழி தீர்க்​கும் வகை​யில் பரத்​தின் நெருங்​கிய நண்​ப​னான சூர்​யாவை கொல்ல நடராஜ் திட்​ட​மிட்​டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

அதன்​படி கடந்த 05-ஆம் தேதி நடராஜ், தனக்கு ஏற்​கெனவே அறி​முக​மான சூர்​யாவை மது அருந்த வரு​மாறு ஊத்​துக்​கோட்டை பகு​திக்கு அழைத்​துச் சென்​றுள்ளார். அங்கு தன் நண்​பர்​கள் பெஞ்​சமின், ஆகாஷ் ஆகியோருடன் சேர்ந்து, காக்​க​வாக்​கம் பகு​தி​யில் வெட்டி கொலை செய்​து, வெங்​கல் பகு​தி​யில் உள்ள காப்​புக்​காட்​டில் வீசி​யுள்​ள்ளதாக போலீசாரிடம் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 people arrested for stabbing a youth to death in revenge for the murder of his friend in Thiruvallur


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->