விவ​சாய கடன் முழுமையாக தள்​ளு​படி குறித்து போராடிவரும் விவசாய பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை..! - Seithipunal
Seithipunal


விவ​சாய கடனை முழு​மை​யாக தள்​ளு​படி செய்ய வேண்​டும் என்று வலி​யுறுத்தி போராடி வரும் விவ​சா​யிகள் சங்க பிர​தி​நி​தி​களு​டன் அமைச்சர்கள் நேற்று பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.

இதன்போது விவ​சா​யிகளின் கோரிக்​கைகளை முதல்​வர் விஜய்யின் கவனத்​துக்கு கொண்டு செல்​வ​தாக அமைச்​சர்​கள் உறுதி அளித்​துள்​ளனர். இருப்பினும் பயிர்க்​கடனை முழு​மை​யாக தள்​ளு​படி செய்​யக் கோரி விவ​சா​யிகள் தொடர் போராட்​டங்​களில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்த சூழலில், அமைச்​சர்​கள் என்​.ஆனந்த், ஆதவ் அர்​ஜூ​னா, கே.ஏ.செங்​கோட்​டையன், சி.டி.நிர்​மல் குமார், ராஜ்மோகன், வினோத், வெங்​கடரமணன், காந்​தி​ராஜ் ஆகியோர் தலை​மை​யில் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் 25 விவ​சா​யிகள் சங்​கங்​களை சேர்ந்த முன்​னணி தலை​வர்​களு​டன் நேற்று பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது.

இதில் விவ​சாய சங்​கத் தலை​வர்​கள் பி.ஆர்​.​பாண்​டியன், பி.அய்​யாகண்​ணு, சாமி நடராஜன், பி.எஸ்​.​மாசிலாமணி, ரவீந்​திரன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். 

இந்த பேச்சுவார்த்தையின் போது தவெக அரசு தனது தேர்​தல் வாக்​குறு​தி​யின் அடிப்​படை​யில் சிறு, குறு விவ​சா​யிகளுக்கு 100 சதவீதம், பெரு விவ​சா​யிகளுக்கு 50 சதவீதம் கடனை நிபந்​தனை​யின்றி தள்​ளு​படி செய்ய வேண்​டும் என்றும், வட்டி தவணை முடி​யும் தரு​வா​யில் திரும்​பிச் செலுத்​திய விவ​சா​யிகளுக்​கும் தள்​ளு​படி அறி​விப்​பில் பயன்​பெற அனு​ம​திக்க வேண்​டும் என்றும், குடும்ப அட்​டைக்கு ஒரு​வர் என்ற பாகு​பாடு கூடாது என்றும், ஏற்​கெனவே கடந்த கால ஆட்​சி​யில் தள்​ளு​படி செய்த வழி​முறையை பின்​பற்றி தள்​ளு​படி அறி​விப்பை வெளி​யிட வேண்​டும் எனவும், நெல் குவிண்​டால் ஒன்​றுக்கு ரூ.3500, கரும்பு டன் ஒன்​றுக்கு ரூ.4500 விலை நிர்​ண​யம் செய்து அறி​விப்பு வெளி​யிட வேண்​டும் என்பன உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை விவ​சா​யிகள் சங்க பிர​தி​நி​தி​கள் முன்​வைத்​தனர்.

அதன் பின்​னர் தமிழ்​நாடு அனைத்து விவ​சா​யிகள் சங்​கங்​களின் ஒருங்​கிணைப்பு குழு தலை​வர் பி.ஆர்​.​ பாண்​டியன் செய்​தி​யாளர்​களிடம் பேசும் போது கூறியதாவது; ''விவ​சா​யிகளின் கோரிக்​கைகள் அனைத்​தும் முதல்​வரின் கவனத்​துக்கு கொண்டு செல்​லப்​படும். உரிய அறி​விப்​பு​கள் சட்​டப்​பேரவை கூட்​டத் தொடரில் வெளி​யாகும் என அமைச்​சர்​கள் உறுதி அளித்​துள்​ளனர்.''என்று கூறினார்.

தொடர்ந்து, தேசிய தென்​னிந்​திய நதி​கள் இணைப்பு விவ​சா​யிகள் சங்க தலை​வர் அய்​யாகண்ணு பேசும்போது;  ''08 அமைச்​சர்​கள் பங்​கேற்று விவ​சா​யிகளின் குறையை கேட்​பது இதுவே முதல்​முறை. எங்​கள் கோரிக்​கள் மீது நல்ல முடிவு ஒரு வாரத்​தில் வரும்'' என்று குறிப்பிட்டார்.

இந்த கூட்​டத்​தில் நிதித்​துறை செயலர் சித்​திக், கூட்​டுறவுத் துறை செயலர் பி.அ​மு​தா, வேளாண் துறை செயலர் பொ.சங்​கர் உள்​ளிட்ட அதி​காரி​கள் மற்​றும் எம்​எல்​ஏக்​கள் தளி ராமச்​சந்​திரன், கீழ்​வேளூர் லதா உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். இதற்​கான ஏற்​பாடு​களை திருத்​துறைப்​பூண்டி தொகுதி எம்​எல்​ஏ கே.​மாரி​முத்​து செய்​திருந்​தமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ministers hold talks with farmers representatives who are struggling for complete agricultural loan waiver


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->