தலை​மைச் செயல​கம் முன் பரபரப்பு; கோணிப் பைகளை அணிந்து நூதன முறை​யில் போராட்​டத்​தில் ஈடுப்பட்ட விவசாயிகள்..! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு தேர்​தல் வாக்​குறு​தி​களை நிறைவேற்​ற​வில்லை எனக் கூறி, காவிரி டெல்டா பாசன விவ​சாய சங்​கங்​களின் கூட்​டமைப்பைச் சேர்ந்த 40-க்​கும் மேற்​பட்ட விவ​சா​யிகள் சென்னை தலைமைச் செயல​கம் முன்பு திடீர் போராட்​டத்​தில் ஈடு​பட்​ட்டுள்ளதாகக் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதோடு, சிறிது நேரம் போக்​கு​வரத்து நெரிசலும் ஏற்​பட்​டது.

முழு பயிர்​கடன் தள்ளுபடி செய்யக் கோரி கோணிப் பைகளை அணிந்து நூதன முறை​யில் அவர்கள் போ​ராட்​டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்​டத்​தில் ஈடு​பட்ட விவ​சா​யிகளை காவல்​துறை​யினர் உடனடி​யாகக் கைது செய்​ததோடு, அரு​கில் உள்ள சமு​தாய நலக்​கூடத்​துக்கு அழைத்​துச் சென்று பின்​னர் விடு​வித்​துள்ளனர்.

குறித்த நூதன போராட்​டத்​தின் போது செய்​தி​யாளர்​களை சந்​தித்த கூட்​டமைப்​பின் தலை​வர் இளங்​கீரன் இது குறித்து கூறியதாவது;

வேளாண் பட்​ஜெட் விவ​சா​யிகளுக்கு ஏற்​றம் தரும், வாழ்​வா​தா​ரத்தை உயர்த்​தும் பட்​ஜெட்​டாக இல்​லை என்றும், முதல்​வர் அளித்த தேர்​தல் வாக்​குறு​தியை தான் நிறைவேற்ற கேட்​கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அடுத்த பிற​வி​யில் விவ​சா​யி​யாக பிறக்க வேண்​டும் என கூறிய​வர் முதல்​வர், அவர் முழு கடன் தள்​ளு​படி என கூறியதை நம்பி வாக்​களித்​தோம் என்றும், வாக்​குறு​திப்​படி முழு பயிர்​கடன் தள்​ளு​படி செய்ய வேண்​டும் என்று கோரிக்கை வைத்தனர்.

மேலும், நெல் குவிண்​டாலுக்கு ரூ.3,500-ஆம், கரும்​புக்கு ரூ.4500-ம் கொடுப்​ப​தாக கூறினர், ஆனால், கொஞ்​சம் கூட தரவில்​லை என்றும், கத்தி படத்​தில் விவ​சா​யத்​தைப் பற்றி நிறைய பேசி​னார். ஆனால் முதல்​வ​ராக எங்​களுக்​கு எது​வுமே செய்​ய​வில்​லை என்று  இளங்​கீரன் சுட்டிக்காட்டி பேசினார். ​


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Farmers engaged in an innovative protest in front of the Presidential Secretariat


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->