பார் ஊழியரை பீர்பாட்டிலால் குத்திவிட்டு தப்பி ஓடிய 3 பேர்.! போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் மது பார் ஊழியரை பீர் பாட்டிலால் குத்திய மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரது மகன் பாலமுருகன்(25). இவர் வெள்ளகோவில் கரூர் ரோட்டில் உள்ள தனியார் மது பாரில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வருகின்றார். 

இந்நிலையில் அடிக்கடி பாருக்கு வரும் மூன்று நபர்கள் நேற்று முன்தினம் இரவு பாலமுருகனை பார்த்து தகாத வார்த்தைகளால் கூப்பிட்டு மது கொண்டுவர கூறியுள்ளனர்.

இதற்கு பாலமுருகன் ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்டதற்கு அந்த 3 நபர்களும் எங்களையே எதிர்த்து பேசுகிறாயா என்று கூறி கீழே கிடந்த பீர் பாட்டிலை உடைத்து குத்தியுள்ளனர்.

இதனால் பாலமுருகன் சத்தம் போட்டதால் பாரில் வேலை வேலை பார்ப்பவர்கள் வந்ததால், அந்த 3 நபர்களும் பாட்டிலை கீழே போட்டுவிட்டு உடனே அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதையடுத்து பாலமுருகனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பாலமுருகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வெள்ளகோவில் போலீசார் 3 பேர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து, அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 men stabbed a bar employee with a beer bottle in Tiruppur


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->