திருப்பூர் : மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் பலி - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கதிரேசன் (32). இவருடன் வேலை பார்க்கும் செல்லபாண்டியன் (30) என்பவருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு, இருவரும் உடுமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 

அப்பொழுது உடுமலை பழனி நெடுஞ்சாலையில் சென்ற போது எதிரே பாலச்சந்திரன் (32) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் பலத்த காயம் அடைந்த மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு மூன்று பேரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 killed in motorcycles accident in Tiruppur


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->