#பெரம்பலூர் || 108 ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து - 3 பேர் பலி - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் அருகே ஆம்புலன்ஸ் மீது தனியார் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநர் உட்பட மூன்று பேர் உயிரிழந்து உள்ளனர்

பெரம்பலூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்பொழுது சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற ஆம்னி பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே போடப்பட்டிருக்கும் தடுப்புச் சுவரை தாண்டி ஆம்புலன்ஸ் மீது பயங்கரமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராஜேந்திரன் மற்றும் விபத்தில் காயம் அடைந்த இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 killed in ambulance Omni bus collision in Perambalur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->