அதிரடி சோதனை: கடலூரில் கஞ்சா விற்பனை செய்த மூன்று பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுப்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பாதிரிப்புலியூர், புதுநகர், சிதம்பரம் மதுவிலக்கு பிரிவு போலீசார் அந்தந்த பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த தீவிர சோதனையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிதம்பரத்தை சேர்ந்த சதீஷ்குமார் (27) திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த முனுசாமி(26) மற்றும் கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த அருண்குமார்(24) ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 cannabis sellers arrested in Cuddalore


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->