ஒரேயடியாக உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை.. இன்றைய விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.

அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,625க்கும், சவரன், ரூ.37,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,680க்கும், சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.37,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 1.50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.61.50க்கும், கிலோவுக்கு ரூ.1500 அதிகரித்து ரூ.61,500க்கும் விற்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

29.09.2022 gold Price


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->