10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ந்தேதி தொடங்கிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 20-ந்தேதி முடிவு பெற்றது. இத்தேர்வை 9.40 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர்.

இதைத்தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 15-ந்தேதி தொடங்கி மே 4-ந்தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in www.dge.in.gov.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் மொத்தம் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 94.66% மாணவிகளும், 88.16% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதேபோல், தமிழகத்தில் முதலிடத்தில் பெரம்பலூர் மாவட்டம் 97.67 சதவீதம் தேர்ச்சியும், 2வது இடத்தில் சிவகங்கை மாவட்டம் 97.53 சதவீதம் தேர்ச்சியும், 3வது இடத்தில் விருதுநகர் மாவட்டம் 96.22 சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2023 SSLC exam results Perambalur district 1st


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->