10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ந்தேதி தொடங்கிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 20-ந்தேதி முடிவு பெற்றது. இத்தேர்வை 9.40 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர்.

இதைத்தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 15-ந்தேதி தொடங்கி மே 4-ந்தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in www.dge.in.gov.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் மொத்தம் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 94.66% மாணவிகளும், 88.16% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதேபோல், தமிழகத்தில் முதலிடத்தில் பெரம்பலூர் மாவட்டம் 97.67 சதவீதம் தேர்ச்சியும், 2வது இடத்தில் சிவகங்கை மாவட்டம் 97.53 சதவீதம் தேர்ச்சியும், 3வது இடத்தில் விருதுநகர் மாவட்டம் 96.22 சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2023 SSLC exam results Perambalur district 1st


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->