10ஆம் வகுப்பு மாணவி பலாத்காரம் - கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி தங்கராஜ் (34). இவர் கடந்த 2020ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு மாணவி ஒருவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவரை கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்பு அப்பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து மீண்டும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் இது குறித்து கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் தங்கராஜை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக தங்கராஜிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், கடத்திச் சென்றதற்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், குழந்தை திருமணம் செய்ததற்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூபாய் 7000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூபாய் இரண்டு லட்சம் நிவாரணம் வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20 years prison for the labour who raped in 10th class girl in erode


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->