5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை... நீதிமன்றம் அதிரடி..! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பொன் பாண்டி பாக்கியராஜ் (39). இவர் 5 வயதுடைய சிறுமிக்கு கடந்த 2022ஆம் ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கோக்சோ சட்டத்தின் கீழ் பாண்டி பாக்கியராஜை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பொன் பாண்டி பாக்கியராஜுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20 years prison for labour who sexually harassing a 5 years old girl in virudhunagar


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->