அக்ஷய திரிதியை: 3 வது முறையாக உயர்ந்த தங்கம் விலை.! எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


அக்ஷய திருதியை நாளான இன்று காலை 6 மணி முதல் நகைக்கடைகள் திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது. சென்னை தி. நகர், புரசைவாக்கம், பாரிமுனை, குரோம்பேட், பாடி, அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நகை கடைகளில் நகை வாங்குவதற்கு இன்று காலையிலிருந்து ஏராளமான பெண்கள் குவிந்தனர். 

இதற்கிடையே அக்ஷய திருதியை முன்னிட்டு தங்கம் விலை இன்று காலையிலேயே 2 முறை அதிகரித்து சவரனுக்கு ரூ. 720 அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில் இன்று 3 வது முறையாக தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 54 ஆயிரத்து 160 க்கும் ஒரு கிராம் ரூ. 65 உயர்ந்து ரூ. 6770 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

அக்ஷய திருதியை நாளான இன்று மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1240 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Akshaya Tritiya Gold prices higher 3rd time


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->